Site icon தமிழ் குழந்தை கதைகள்

மரியாதை ராமன் கதைகள்: முட்டாள் திருடன் -Mariyathai Raman Stories: The Stupid Thief

மரியாதை ராமன் கதைகள்: முட்டாள் திருடன் -Mariyathai Raman Stories: The Stupid Thief:- மரியாதை ராமன் ஒருநாள் தன்னோட வீட்டு வாசல்ல நின்னுகிட்டு இருந்தாரு

அப்ப பக்கத்து ஊர் சந்தையில வியாபாரம் பார்க்குற வியாபாரிங்க அவர பார்க்க வந்தாங்க , அவுங்க சொன்னாங்க நாங்க பக்கத்து ஊரு காரங்க ,இவன் பேரு மணி ,இவன் பேரு தங்கன் இவுங்க ரெண்டு பேரும் எங்க ஊர் சந்தையில பக்கத்து பக்கத்து இடத்துல வியாபாரம் செஞ்சுகிட்டு இருக்காங்க ,இவுங்க ரெண்டு பேரோட வீடும் பக்கத்துல பக்கத்துல தான் இருக்கு

இவுங்களுக்குள்ள எப்பவும் சண்டதான் ,நேத்து சரியா இவனோட வீட்டுலயும் ,தங்கனோட கடையிலயும் திருட்டு நடந்து இருக்கு ,ஊரு பெரியவான்களான நாங்க எவ்வளவு முயற்சி செஞ்சும் திருடன் யாரு திருட்டு கொடுத்தவன் யாருனு கண்டுபிடிக்க முடியல ,எங்க ஊருல எல்லாம் உங்களோட சமயோஜித புத்தி பத்தி சொல்லி இருக்காங்க உங்க அறிவை பயன்படுத்தி ,அத நீங்கதான் கண்டுபிடிச்சி கொடுக்கணும்னு சொன்னாங்க

உடனே மரியாதை ராமன் நீங்க உங்க வீட்டுல போய் காத்திருங்க நான் வந்து விசாரிக்குறேனு சொல்லி அனுப்புச்சாறு ,அவுங்க போனதுக்கு அப்புறமா பக்கத்து ஊருக்கு போன மரியாதை ராமன் நேரா மணியும் ,தங்கமும் வியாபாரம் செய்யுற சந்தைக்கு போனாரு ,அங்க அவுங்க கடை இருக்குற இடத்தையும் பக்கத்து கடைகளையும் நோட்டமிட்ட அவரு நேரா மணியோட வீட்டுக்கு போனாரு

அவரை மணி வரவேர்தான் ,அவன் கிட்ட நீ என்ன தொழில் செய்யுற ,உன்வீட்டுல நடந்த திருட்ட பத்தி சொல்லுனு சொன்னாரு ,உடனே மணி சொன்னான் ஐயா நான் பலகார கடை வச்சிருக்கேன் நான் நிறய லட்டு செஞ்சு வியாபாரம் செஞ்சுகிட்டு இருக்கேன் , என் பக்கத்து கடை தங்கன் நடத்திக்கிட்டு வர்றான் ,அவனுக்கும் எனக்கும் எப்பவும் சண்டை வந்துகிட்டே இருக்கும்

அவன் என் வீட்டு பக்கத்துல தான் குடி இருக்கான் ,நேத்து ராத்திரி வியாபாரம் செஞ்சு எடுத்துட்டு வந்த 500 ரூபாய பெட்டியில வச்சுட்டு தூங்கிட்டேன் காலையில எழுந்திரிச்சு பார்த்தா அத காணல ,பணம் பெட்டி வச்சிருந்த அறையோட கதவு தொறக்க படவே இல்ல , பெட்டி மட்டும் நகந்து இருந்துச்சு ,ஜன்னல் தொறந்து இருந்துச்சு ,அதுவழியா தான் தங்கன் வந்திருக்கணும் ஏன்னா ஜன்னலுக்கு நேரா அவன் வீடுதான் இருக்குனு சொன்னான்

இத கேட்ட மரியாதை ராமன் அந்த அறைய நல்லா சோதிச்சு பாத்தாரு அங்க ஒரு துணி கிடந்துச்சு ,அந்த துணிய எடுத்து பார்த்த மரியாதை ராமனுக்கு அதிரிசியா இருந்துச்சு ,அந்த துணியில தங்கனோட கடை பேரு இருந்துச்சு ,இத பார்த்த மணி துள்ளி குதிச்சான் ,பார்த்தீங்களா நான் சொன்னது உண்மையா போச்சு அந்த திருட்டு பயலோட துணி இங்க கிடக்கு பாருன்னு சொன்னான்

உடனே அவன் வீட்டுல இருந்து வெளிய வந்த மரியாதை ராமன் அவனையும் கூப்பிட்டுக்கிட்ட தங்கனோட கடைக்கு போனாரு அங்க போயி திருட்டு நடந்த இடத்தை பார்த்தாரு ,அங்கேயும் ஒரு பெட்டி தொறந்து கிடந்துச்சு ,அப்பத்தான் தங்கன் சொன்னான் இங்க பாருங்க இந்த கல்லா பெட்டியிலதான் நான் பணம் வச்சிருந்தேன்னு காட்டினான்

அப்பத்தான் நீ பெட்டியை பூட்டுனியான்னு கேட்டாரு ,ஆமாம் ராமன் அவர்களே இங்க பாருங்க இந்த பேட்டியோட பூட்டு கீழ கிடக்குனு காமிச்சான் ,அத எடுத்து பார்த்த ராமன் அந்த பெட்டியில பலகாரம் செய்ய பயன்படுத்துற எண்ணெய் ஒட்டி இருந்தத பார்த்தாரு ,

இத பார்த்த தங்கன் சொன்னான் பார்த்தீங்களா நான் சொன்னது சரியா போச்சு இந்த பலகாரம் செய்யுற மணிதான் தன்னோட அழுக்கு எண்ணை கையோட இந்த பூட்ட ஒடச்சிருக்கான் அதான் அவனோட கையில இருந்த என்னை பூட்டுல ஒட்டி இருக்குனு சொன்னான்

அப்ப இந்த ரெண்டு பயலுகளும் திருட்டு பயலுகதான் ஒருத்தன் கிட்ட இருந்து இன்னொருத்தன் திருடி இருக்காண்ணு நாங்க நினைக்குறோம்னு அந்த ஊர் பெரியவங்க சொன்னாங்க ,ஆனா மரியாதை ராமன் யோசனையிலேயே இருந்தாரு ,அவரு என்ன சொல்லப்போறாருனு ஊரே ஆவளோட காத்துகிட்டு இருந்துச்சு

அப்பத்தான் அவரு சொன்னாரு எனக்கு அந்த சந்தையில இவுங்களோட கடைக்கு பக்கத்துல இவுங்கள பத்தி நல்லா தெரிஞ்ச யாரவது இருக்காங்களான்னு கேட்டாரு ,அதுக்கு அந்த கடைக்காரர் சொன்னாரு இந்த பக்கம் ஒரு ஜூஸ்ம்,சூப்பும் விக்கிற கடை காரர் கடை வச்சிருக்காரு ,இன்னொரு பாக்கம் தொரட்டி செஞ்சு விக்கிற ஒருத்தன் கடை வச்சிருக்கானு சொன்னாரு

இத கேட்ட மரியாதை ராமன் சிரிச்சாரு ,அப்ப நான் அவனுங்க ரெண்டு பேரையும் விசாரிக்கணும்னு சொன்னாரு

உடனே அவரை கூட்டிகிட்டு சந்தைக்கு போனாங்க ஊர் பெரியவங்க ,நேரா தொரட்டி செய்யுறவன்கிட்ட போன மரியாதை ராமன் கேட்டாரு ஐயா நேத்து மணி வீட்டுல நடந்த திருட்ட பத்தி தெரியுமான்னு கேட்டாரு அதுக்கு அந்த வியாபாரி சொன்னார்

கேள்விப்பட்டேன் ராமன் அவர்களே ஆனா அவன் ஒரு முட்டாள் அவனோட வீட்டு ஜன்னல பார்த்தீங்களா அது ரொம்ப சின்னது அது வழியா ஒருத்தர் உள்ள வந்து திருட்டு நடித்தி இருக்க முடியாதுனு சொன்னாரு

இத கேட்ட மரியாதை ராமன் சொன்னாரு அப்ப உங்கள மாதிரி தொரட்டி செய்ய தெரிஞ்ச யாராவது தொரட்டி செஞ்சு கொண்டுவந்து ஜன்னல் வழியா பெட்டியை ஜன்னல் பக்கமா இழுத்து திருடி இருப்பங்களோனு கேட்டாரு

இத கேட்ட ஊர் பெரியவங்களுக்கு புரிஞ்சி போச்சு இவன்தான் அந்த திருட்டு பயனு ,ஆனா அந்த வியாபாரி சொன்னான் இருக்கலாம் ராமன் ஆவர்களேனு துளி கூட பயம் இல்லாம தைரியமா சொன்னாரு ,உடனே அதே மாதிரி தங்கனோட கடையிலயும் திருட்டு நடந்து இருக்கு அதப்பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமான்னு கேட்டாரு

அதுக்கு அந்த தொரட்டி வியாபாரி சொன்னாரு தெரியும் ராமன் அவர்களே அந்த பூட்டுல எண்ணை ஒட்டி இருந்ததா கூட கேள்வி பட்டேனு சொன்னாரு , அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு உங்க கடலியில கூடத்தான் எண்ணெய் இருக்கு அத வச்சு உங்கள யாரும் சந்தேக பட மாட்டங்களானு கேட்டாரு அதுக்கு அந்த வியாபாரி சொன்னாரு

சந்தேகம்னு வந்துட்டா தீர விசாரிக்கணும் ராமன் அவர்களே ,என்ன நீங்க எங்க கூப்பிட்டாலும் வர்றேன்னு சொன்னாரு ,அப்பதான் அந்த ஊர் பெரியவங்க எல்லாம் திருட்டு பயலே இன்னுமா உன்ன விசாரிக்க நீதான் திருடன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்னு சொன்னாங்க

அப்பத்தான் மரியாதை ராமன் சொன்னாரு ,இல்ல இவரு திருடனா இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் உங்களுக்கு ஒருத்தன தெரியுமான்னு கேட்டாரு

யார கேக்குறீங்கன்னு எல்லாரும் திரும்ப கேட்டாங்க ,அதாங்க இவுங்க ரெண்டு பேரு கடைக்கு பக்கத்துல கடை வச்சிருக்குறவரு ,இவுங்க ரெண்டு பேரு கூடையும் அடிக்கடி சண்ட போடுறவரு ,இவுங்க ரெண்டு பேருமேலயும் பொறாம படுறவரு ,ரெண்டு பெரும் சண்ட போட்டா சந்தோச படுறவரு

இத கேட்ட எல்லாருக்கும் தலை சுத்திடுச்சு அதுதான் இவன் இந்த தொரட்டி செய்யுறவன்தான் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பொறுத்துறானு சொன்னாரு

ஆனா மரியாதை ராமன் திரும்பவும் கேட்டாரு ,இவரு இல்லைங்க தன்னோட கடையில ஜூஸ் போடுறதுக்கு பழம் பறிக்க பெரிய தொரட்டி வச்சிருக்குறவரு ,சூப் போடுறதுக்கு எண்ணெய் பயன்படுத்தி கை எல்லாம் எண்ணெய் கரையோட இருப்பாரே அவர கேட்டேன்னு சொன்னாரு

இத கேட்ட அடுத்த நொடி பக்கத்துல எதுவுமே நடக்காத மாதிரி நின்னுகிட்டு இருந்த ஜூஸ் கடைக்காரர் அங்க இருந்து ஓட ஆரம்பிச்சாரு ,அப்பத்தான் எல்லாருக்கும் புரிச்சது தொரட்டிய வச்சி திருட்டு நடக்கணும்னு அத செய்யுறவன்தான் திருடன் இல்லை தொரட்டி வச்சிருக்கிற எல்லாரையும் நாம் விசாரிக்கணுமா அத விட்டுட்டு இந்த தொரட்டி வியாபாரிய சந்தேக பட்டுட்டமேன்னு நினைச்சாங்க

உடனே அந்த ஊர் இளைஞர்கள் எல்லாம் ஓடி போயி அந்த ஜூஸ் சூப் விக்கிறவரை புடிச்சி இழுத்துகிட்டு வந்தாங்க ,அவரை கட்டி வச்சு விசாரிச்சதுல அவருதான் அந்த திருட்ட செஞ்சதா ஒத்துக்கிட்டாரு ,அப்பத்தான் மரியாதை ராமனோட அறிவும் ,பொறுமையும் ,புத்திசாலித்தனமும் எல்லாருக்கும் புரிஞ்சது

Exit mobile version