Site icon தமிழ் குழந்தை கதைகள்

முட்டாள் காவல்காரன்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

முத்தமிழ் நாட்டை முத்தமிழ் அரசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தார்,அவருக்கு புதியதாக தென்னை தோட்டம் அமைக்க ஆசையாக இருந்தது .

அரண்மனைக்கு அருகில் உள்ள நிலத்தை பண்படுத்தி புதிதாக தென்னை மரங்களை நாட்டார்.

தென்னை மரங்களை பாதுகாத்த அரணமனை சேவகனான சிவம் என்ற காவலனை பணியில் அமர்த்தினார்

சிவம் நல்ல காவல் காரனாக இருந்தாலும் அவன் ஒரு முட்டாள் .இரவு பகலாக காவல் காத்த சிவம் , ஒருநாள் மிக சோர்வடைந்தான் ,

தென்னை மரங்களை பார்த்து கொள்வது தானே என்வேலை என்று யோசித்த சிவம் , அனைத்து மரங்களையும் பிடுங்கி எடுத்து தனது வீட்டிற்று எடுத்து சென்று பாதுகாத்தான்

தென்னை மரங்களை பார்வையிட வந்த அரசர் நடந்த நிகழ்ச்சிகளை கேள்விப்பட்டு சிரித்தார்

யாருக்கு என்ன வேலை கொடுத்ததால் நல்லபடியாக முடிப்பார்கள் என்று அறியாமல் ,உன்னிடம் வேலை கொடுத்தது என்னுடைய தவறு .

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

என திருவள்ளுவர் சொல்படி நல்ல காவல்காரனை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்னுடையது என்றார் அரசர்

Exit mobile version