Site icon தமிழ் குழந்தை கதைகள்

Cinderella Story In Tamil – சின்ரெல்லா

Cinderella Story In Tamil

Cinderella Story In Tamil

Cinderella Story In Tamil – சின்ரெல்லா, சிண்ட்ரெல்லா,சின்ட்ரெல்லா,ஸிண்ட்ரெல்லா

ஒரு காலத்துல சின்ரெல்லானு ஒரு அழகான பொண்ணு இருந்த, அவ ரொம்ப அழகாவும் அறிவோடயும் இருந்ததால அவள எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு நாள் அவுங்க அம்மா மரணமடைஞ்சாங்க அதுக்கு அப்பறமா அவுங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி இன்னும் ரெண்டு கொழந்தைகளையும் பெத்துக்கிட்டாரு.

தன்னோட குழந்தைகளுக்கு நல்ல துணியும் உணவும் கொடுத்த அந்த சித்தி சின்ரெல்லாவுக்கு ஒண்ணுமே கொடுக்க மாட்டாங்க , அதனால வருத்தத்துல இருந்த சின்ரெல்லா அடுப்படியிலேயே கிடந்தா புகைபோக்கிக்கு பக்கத்துல இருந்து அவ தனிமையில வாடுறத பத்தி தனக்குள்ளயே பேசிக்கிட்டே இருப்பா.

ஒரு நாள் அந்த நாட்டோட மகாராஜா ஒரு அறிவிப்பு செஞ்சாரு,நாட்டில இருக்குற அழகான பெண்களை எல்லாம் அரண்மனைக்கு விருந்துக்கு கூட்டிட்டு வரணும்னும்,அங்க இளவரசருக்கு பிடிச்ச பொண்ண இளவரசருக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்படும்னும் அந்த அறிவிப்பு இருந்துச்சு.

அதைக்கேட்ட அந்த சித்தி தன்னோட ரெண்டு மகள்களையும் நல்லா அலங்காரம் பண்ணி கூட்டிகிட்டு போனாங்க. இத பாத்து ரொம்ப வறுத்த பட்டா சின்ரெல்லா. உடனே அந்த போக கூடு வழியா ஒரு தேவதை வந்துச்சு, அழாத சின்ரெல்லா நான் உனக்கு ஒரு வரம் தர்றேன் இந்த மந்திர செருப்பை போட்டுக்க ஒரு இளவரசிக்கு கிடைக்குற அணைத்து வசதியும் உனக்கு கிடைக்கும்னு சொல்லுச்சு.

உடனே அந்த செருப்பை போட்டா சின்ரெல்லா, உடனே அவளோட பழைய துணிகள் எல்லாம் மாரி புதிய துணிகளா மாறுச்சு,புதிய நகைகள் தானா அவளுக்கு கிடைச்சது,அரண்மனைக்கு போக ஒரு சாரட் வண்டியும் வந்துச்சு

சின்ரெல்லா அந்த வண்டில ஏறி அரண்மனைக்கு போனா, சின்ரெல்லாவ பாத்த இளவரசர் அவளோட அழகுல மயங்கி போயி அவகூட நடனமாடுனாரு. இத பத்த அரசர் நம்ம இளவரசருக்கு ஏத்த பொண்ணு இதுதான்னு முடிவு பண்ணினாங்க.ஆனா திடீர்னு சின்ரெல்லாவுக்கு தன்னோட சித்தி ஞாபகம் வந்துச்சு உடனே வேகா வேகமா வீட்டுக்கு ஓடுனா ,அப்படி ஓடும்போது ஒரு மந்திர செருப்பு மட்டும் கழண்டு விழுந்துருச்சு அத எடுத்த இளவரசர்,அந்த பொண்ணு யாருனு கண்டு பிடிக்க சொல்லி எல்லாரையும் அனுப்புனாரு.

ஒவ்வொரு வீடா போயி சின்ரெல்லாவ தேடுனாங்க காவலர்கள் ,ஆனா அவள கண்டு பிடிக்க முடியல அந்த நாட்ல உள்ள எல்லா பெண்களும் தந்தான் அந்த பெண்ணுன்னு பொய் சொன்னந்த,அப்பத்தான் இளவரசருக்கு ஒரு யோசனை தோணுச்சு இந்த மந்திர செருப்ப எல்லாரையும் போட சொல்லுங்க யாருக்கு இது பொருத்தமா இருக்கோ அவள எங்கிட்ட கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு .

அப்படி ஒவ்வொரு வீடா போன காவலர்கள் சின்ரெல்லா வீட்டருக்கும் போனாங்க.அவுங்க சித்தி பொண்ணுங்க அந்த செருப்ப போட முடியல பக்கத்துல அழுக்கு உடையோட இருந்த சின்ரெல்லாவ போட சொன்னாங்க,இத பத்த அவுங்க சித்தி ரொம்ப கோப பாட்டாங்க.

இத பாத்த காவலர்கள் இது இளவரசரோட கட்டளை ஒரு பெண்ணை கூட சோதிக்கமா விட முடியாதுனு சொல்லி சின்ரெல்லாவ செருப்பை போட சொன்னங்க ,செருப்பை போட்ட சின்ரெல்லா மறுபடியும் ஜொலிக்க ஆரம்பிச்சா அவளோட கால்ல செருப்பு நல்லா பொருந்துச்சு. உடனே ஓடிவந்த இளவரசர் சின்ரெல்லா கிட்ட தன்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி கேட்டாரு.இதுக்கு அப்புறமா சின்ரெல்லாஉம் அந்த இளவரசரும் ரொம்ப சந்தோசமா வாழ்ந்தாங்க

Exit mobile version