Site icon தமிழ் குழந்தை கதைகள்

Black Panther and Tiger Story – கரும் சிறுத்தையும் புலியும்

Black Panther and Tiger Story – கரும் சிறுத்தையும் புலியும்:-ஒரு அடர்ந்த காட்டு பகுதியில ஒரு கரும் சிறுத்தையும் புலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த புலிக்கு கரும் சிறுத்தையைவிட தன்னோட தோல் தான் அழகா இருக்குனு நெனப்பு

அதனால எப்பவும் அகங்காரத்தோட சிறுத்தைய வம்பிழுத்துகிட்டே இருக்கும்

ஒருநாள் ஒரு வேட்டைக்காரர்கள் கூட்டம் அந்த காட்டுக்கு வந்தாங்க

சின்ன சின்ன மிருகங்கள்ல இருந்து பெரிய காட்டு மிருகங்கள் வரைக்கும் எல்லா மிருகங்களையும் பிடிச்சி கூண்டுல அடிச்சாங்க

சில புலி குட்டிகளையும் அவுங்க பிடிச்சிட்டு போயி கூண்டுல அடைச்சது புலிக்கும் கரும் சிறுத்தைக்கும் தெரிய வந்துச்சு

அதனால அதுங்கள காப்பாத்த புலியும் சிறுத்தையும் போச்சுங்க

அப்ப மரத்து மேல இருந்த ஒரு வேட்டைக்காரன் புலியோட நிறத்தை வச்சு புலி வர்றத சுலபமா கண்டுபிடிச்சு அது மேல ஒரு ஒரு வலய போட்டு பிடிச்சுட்டான்

ஆனா கருமை நிறத்துல இருந்த கரும் சிறுத்தைய அவன் கவனிக்கல ,அதனால மெதுவா வேட்டைக்காரங்க இருக்குற இடத்துக்கு வந்த கரும் சிறுத்தை பதுங்கி பதுங்கி வந்து அந்த வேட்டை காரங்கல அடிச்சி விரட்டிருச்சு

இத்தனை நாள் தன்னோட தோல் அழகு முக்கியம்னு நினைச்சுட்டு இருந்த புலி சிறுத்தையோட கரும் தோல் தான் ,பதுங்கி இருந்து வேட்டகாரங்க கிட்ட இருந்து தன்ன காப்பாத்துச்சுங்கிற உண்மையா புரிஞ்சிகிட்டு திருந்திடுச்சு

Exit mobile version