Site icon தமிழ் குழந்தை கதைகள்

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai:ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை மாடியில உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ,அப்ப ரொம்ப குளிர் அடிச்சது ,உடனே அரசர் அடடா எவ்வளவு குளிரடிக்குது என்னாலேயே தாங்கமுடியலைனு சொன்னாரு.

உடனே பீர்பால் சொன்னாரு ஆமாம் அரசே ரொம்ப குளிருது ,ஆனா இதைவிட அந்த ஆத்து குள்ள இறங்குனா ரொம்ப குளிரும் யாராலயும் தாங்கவே முடியாதுனு சொன்னாரு

உடனே அக்பர் அப்படி ஆத்து தண்ணியில நின்னு குளிர் தங்குறவருக்கு பரிசுன்னு அறிவிக்க சொன்னாரு

இத கேள்விப்பட்ட ஏழை விவசாயி ஒருத்தரு அரண்மனைக்கு வந்து தான் போட்டியில கலந்துகிறதா சொன்னாரு

உடனே அவருக்கு ரெண்டு காவல்காரங்களை நியமிச்சி கூடவே இருந்து அவர் குளிரை தாங்குறாரான்னு பாத்துகிட சொன்னாரு அரசர்

ரொம்ப கஷ்டப்பட்டு குளிர்ந்த நீர்ல இருந்த அந்த விவசாயி மறுநாள் அரசரை பாத்து பரிசு கேட்டாரு ,

அதுக்கு அக்பர் நீ எப்படி அவ்வளவு குளிர தாங்குனனு கேட்டாரு

அதுக்கு அந்த விவசாயி சொன்னாரு அரசே எனக்கு தனிமையா இருக்குறது மட்டும்தான் பயமா இருந்துச்சு அதனால அரண்மனை வாசல்ல இருக்குற விளக்கை பாத்துகிட்டே குளிரை தாங்குனேனு சொன்னாரு

அதுக்கு அரசர் ஓஹ் அரண்மனை விளக்குல குளிர் காஞ்சிகிட்டே போட்டியில கலந்துக்கிட்டியா ,உனக்கு பரிசு கிடையாதுன்னு சொல்லி வெளியில அனுப்பிச்சிட்டாரு

இத கேள்விப்பட்ட பீர்பால் அரசருக்கு நல்ல புத்தி சொல்ல நினைச்சாரு ,உடனே அரசரை தன்னோட வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைச்சாறு

அன்னைக்கு ராத்திரி அரசர் பீர்பாலோட வீட்டுக்கு போனாரு ,ரொம்ப பசியா இருந்த அரசர் வேகமா உணவு பரிமாற சொன்னாரு ,ஆனா பீர்பால் உணவு இன்னும் வேகலைனு சொன்னாரு

இத கேட்ட அக்பருக்கு கோபம் வந்துடுச்சு ,நெருப்பு நிறய மூட்டி உடனே உணவ தயாரிக்க சொன்னாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு நெருப்பா ,நான் அரண்மனை விளக்கு வெளிச்சத்துலல உணவு சமைச்சிக்கிட்டு இருக்கேனு சொன்னாரு

இத கேட்ட அரசருக்கு உண்மை புரிய ஆரம்பிச்சது ,பீர்பால் சொன்னாரு அரண்மனை விளக்கு வெளிச்சத்துல ஒருத்தர் ராத்திரி முழுசும் தண்ணில இருக்க முடியும்னா நம்மளால சமைக்கவும் முடியும்லன்னு கேட்டாரு

தன்னோட தவறை உணர்ந்த அரசர் ,அந்த விவசாயிய வரவச்சு பரிசு கொடுத்து அனுப்புனாரு

Exit mobile version