Site icon தமிழ் குழந்தை கதைகள்

Ant and Elephant Story in Tamil – யானையும் எறும்பும் சிறுவர் நீதி கதை

Ant and Elephant Story in Tamil – யானையும் எறும்பும் சிறுவர் நீதி கதை:- ஒரு ஊருல ஒரு திமிர் பிடிச்ச யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அது ரொம்ப பெருசா இருக்குறதால ரொம்ப திமிரா இருந்துச்சு

அந்த யானை எப்பவும் மத்த மிருகங்களுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு ,

அந்த யானைய பாத்தாலே எல்லா மிருகங்களும் ஓடி போயிடும்

அந்த காட்டுல ஒரு எறும்பு கூட்டமும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு , அந்த எறும்புங்க எப்பவும் சுறுசுறுப்பா இருந்துச்சுங்க ,

அதுங்க எப்பவும் தங்களோட உணவ சேமிச்சு வைக்கிற வேலைய பாத்துகிட்டே இருந்துச்சுங்க

ஒருநாள் அந்த எறும்புங்க செய்ற வேலைய பாத்த அந்த யானை பக்கத்துல இருந்த குலத்துக்கு போயி தண்ணிய தன்னோட துதிக்கையாள எடுத்துட்டு வந்து

அந்த எறும்புங்க மேல அடிச்சி விட்டுச்சு,அந்த எறும்புங்க தங்களோட சாப்பாடு எல்லாம் நனைஞ்சு போனத பாத்து ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க

தொடர்ந்து அந்த எறும்புகளுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு அந்த யானை

ஒருநாள் ரொம்ப கோபமான ஒரு எறும்பு தன்னோட தாத்தா கிட்ட போயி நடந்த சொல்லுச்சு ,அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு

ரௌத்திரம் பழகு ,அப்படிங்கிற பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரியுமா ,கோபப்பட வேண்டிய விசயத்துக்கு சகிச்சிக்கிட்டு இருக்க கூடாது அப்படின்னு சொல்லுச்சு

உடனே அந்த சின்ன எறும்பு அந்த யானை இருக்குற இடத்துக்கு போச்சு ,அங்க அந்த யானா படுத்து தூக்கிகிட்டு இருந்துச்சு

அதோட துதிக்கைக்குள்ள போன அந்த எறும்பு மெதுவா கடிக்க ஆரம்பிச்சது

வலிதாங்காத யானை யார் என்னோட துதிக்கைக்குள்ள கடிக்கிறதுன்னு கேட்டு அலறுச்சு

எங்களை சின்ன விளங்குன்னு தான நீ எங்க மேல தண்ணி ஊத்தி விளையாண்ட இப்ப உன்ன என்ன பண்றேன்னு பாருன்னு சொல்லி திரும்ப திரும்ப கடிக்காது,வலிதாங்க முடியாத யானையோட துதிக்கைல இருந்து வெளிய வந்த அந்த எறும்ப பாத்து சொல்லுச்சு

தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடுங்க என்னால உங்களுக்கு இனிமே தொந்தரவு இருக்காதுன்னு சொல்லுச்சு

குழந்தைகலா நாம பலசாலியா இருந்த அடுத்தவங்கள தொல்லை படுத்தக்கூடாது ,அதே நேரத்துல பலம் குறைவா இருந்த யார பாத்தும் பயப்பட கூடாது

Exit mobile version