An Unexpected Visit from Mulla – ஜன்னலில் தலை :- முல்லா ரொம்ப எளிமையான வாழ்கை வாழ்ந்துகிட்டு இருந்தாலும் மத்தவங்களுக்கு உதவுறத எப்பயும் நிறுத்துவது இல்லை
உணமையாவே உதவி தேவ பட்டவங்களும் ,சும்மா பேராசையோட முல்லா கிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்கும் நிறய பேரு முல்லாவ தேடி வந்தாங்க ,ஆனா முல்லா உண்மையான உதவி தேவபட்டவங்களுக்கு உதவுறதும் ,தன்ன ஏமாத்தி பொழைக்க நினைக்குறவங்கள கிண்டல்செஞ்சு அனுப்புறதுனு இந்த விசயத்துல கண்டிப்பா இருந்தாரு முல்லா
இருந்த போதிலும் நிறய பேரு ரொம்ப அதிகமா தங்களோட பிரச்சனைன்னு பொய் சொல்லி முல்லா கிட்ட இருந்து பணத்தை வாங்கிட்டு போய்கிட்டே இருந்தாங்க ,அப்படித்தான் பக்கத்து கிராமத்துல வசிக்கிற ஒருத்தரு முல்லாவ பார்க்க வந்தாரு
அவரு முல்லாகிட்ட ,எனக்கு கொஞ்சம் பணம் வேணும்னு ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டாரு ,ரொம்ப தொந்தரவு செஞ்சதால முல்லா அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டாரு ,ஆனா மூணு மாசத்துல திரும்பி கொடுக்கணும்னும் சொன்னாரு
அத வாங்கிட்டு போன அந்த வியாபாரி ஆறு மாசம் ஆகியும் பணத்தை திரும்பி கொடுக்காம இருந்தாரு ,உடனே முல்லா ஒருநாள் நேரா போயி தன்னோட பணத்த வாங்கிட்டு வர நினைச்சாரு ,உடனே அவர் வாசிச்சிகிட்டு இருந்த ஊருக்கு போனாரு முல்லா
அந்த வியாபாரியோட வீட்ட விசாரிச்சு மெதுவா நடந்து போனாரு ,முல்லா வர்றத அந்த வியாபாரி தன்னோட ஜன்னல் வழியா பார்த்துட்டு ஒளிஞ்சிகிட்டாரு ,இத முல்லாவும் கவனிச்சாறு ,இருந்தாலும் வீட்டுல யாருனு சத்தமா கேட்டாரு முல்லா
உள்ள இருந்து வந்த அந்த வியபாரியோட மனைவி வெளிய வந்து ,வீட்டுல அவரு இல்லை வெளிய போயிருக்காரு ,வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்னு சொன்னாங்க ,உடனே அங்க இருந்த திண்ணையில உக்காந்துகிட்டு ,எனக்கு தெரியுமே அவரு வீட்ட விட்டு வெளிய போயிருக்காருனு
ஆனா ரொம்ப ஞாபக மறதி அவருக்கு இருக்கும்னும் தெரியும் ,எப்படி எங்கிட்ட பணம் வாங்கிட்டு திரும்ப கொடுக்க மறந்துட்டாரோ அதே மாதிரி ,தன்னோட தலையையும் மறந்து ஜன்னல் பக்கத்துல வச்சிட்டு போயிருக்காரு ,அவரு எப்படியும் தன்னோட தலையை எடுக்க திரும்பி வருவாரு ,நான் அதுவரைக்கும் இங்கயே இருந்து அவரை பார்த்துட்டு போறேன்னு சொன்னாரு
அப்பதான் அந்த அம்மாவுக்கு புரிஞ்சது தன்னோட கணவரை ஜன்னல் வழியா ஏற்கனவே முல்லா பாத்துட்டாருனு ,முல்லா திரும்பவும் சொன்னாரு இங்க பாருங்க அவரோட செருப்ப கூட மறந்துட்டு போய்ட்டாரு அவரு கண்டிப்பா திரும்ப வருவருனு ,வீட்டு வாசல்ல இருந்த அந்த வியாபாரியோட செருப்ப காட்டுனாரு முல்லா
அடடா இந்த ஆள் கண்டிப்பா பணம் வாங்காம போகமாட்டாரு ,இவரு இப்படி உக்காந்து இருந்தா தன்னோட கணவரும் வெளிய வர முடியாதுனு நினைச்ச அந்த வியாபாரியோட மனைவி வீட்டுக்குள்ள போயி ,முல்லாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க
அத வெங்கிக்கிட்ட முல்லா உங்க கணவரோட தலைக்கு என்னோட வணக்கத்தை சொல்லிடுங்கனு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்புனாரு ,திருட்டுத்தனம் செஞ்சு தன்னையும் சங்கடத்துல மாட்டி விட்ட தன்னோட கணவரை அடிக்க வேகமா வீட்டுக்குள்ள ஓடுனாங்க அந்த அம்மா
